News Just In

1/06/2022 04:00:00 PM

மட்டக்களப்பில் கடந்த 3 தினங்களாக பெய்த அடை மழையால் 842 பேர் பாதிப்பு



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 227 குடும்பங்களைச் சேர்ந்த 842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 3 ஆம் தேதி பெய்த மழையினால் 183 குடும்பங்களைச் சேர்ந்த 692 பேரும், 4 ஆந் திகதி பெய்த மழையினால் 25 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேரும், 5 ஆந் திகதி பெய்த மழையினால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேருமாக மொத்தம் 842 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவுகளும், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவுகளும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவுகளும், மண்முனைப்பற்று ஆரையம்பதி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தலா 1 கிராம சேவகர் பிரிவுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசங்களில் பகுதி அளவான வீடு சேதம் ஒன்றும், அடிப்படைக் கட்டமைப்பு பாதிப்பு ஒன்றும் பதிவாகியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம் மாவட்ட ஊடகப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தது.







No comments: