தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்கின்ற திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற உள்ளதாக அவர் கூறினார்.
No comments: