வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், இளைஞர் பாராளுமன்றம் ஆகிவை ஒன்றிணைந்து குறித்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்ததானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஷீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர், யுவதிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: