தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார செயலாளரும், மனித உரிமைகள் அமைச்சருமான தாரிக் அஹ்மட்டை நேற்று(25) சந்தித்துள்ளார். சுமந்திரனை சந்தித்தமை மகிழ்ச்சியளிப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் தாரிக் அஹமட்டை தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்கு பிந்தைய பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அங்குப் பல இராஜதந்திர சந்திப்புக்களை நடத்தியதுடன், பின்னர் கனடாவுக்கு சென்று சந்திப்புகளை நடத்தினர். இந்நிலையில், தற்போது பிரித்தானியாவுக்கு சென்று இராஜாந்திர சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments: