பொது இடங்களுக்கு செல்லும் நபர்கள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமைக்கான அட்டைய கட்டாயமாக்குவது தொடர்பான தீர்மானம் அடுத்த கொரோனா தடுப்பு செயலணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படும் என இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் நூறில் ஆறு வீதமானோருக்கு இன்னும் 2ஆவது தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பதால் இப்படியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: