News Just In

11/10/2021 06:50:00 AM

ஜனாதிபதியால் தமிழர்களுக்கு ஜனநாயகமும், பாதுகாப்பும் கிடைக்காது - சாணக்கியன் சபையில் தெரிவிப்பு!

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வேண்டாம் என்ற நிலையில் அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என நாம் கேட்கின்றோம். எம்மை புறக்கணித்தால் நாம் வேறு எங்கு செல்வது? எனவே ஜனாதிபதியிடம் நாம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன செய்வார் என்பது எமக்கும் தெரியும்.

ஜனநாயகத்தை பாதுகாக்கமாட்டார் என்பதும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்கு தெரியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

No comments: