(எப்.முபாரக்)
தற்போது நாட்டை பெரிதும் அச்சுறுத்தும் கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுதல் பிரதேச சபையின் சேவைகளை தொய்வின்றி கொண்டு செல்லுதல் குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை பாதுகாக்கும் நோக்குடன் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஜனாப் ஏ.முபாறக் அவர்களினால் சிடிஎப் CDF (Child development fund) நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குச்சவெளி பிரதேச சபையின் தலைமையகத்தில் வைத்து குறித்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்களால் குச்சவெளி தவிசாளரிடம் இன்று(12) Covid-19 தொற்றுநீக்கிகள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திருமதி மாலினி அசோக்குமார் மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் கும்புறுப்பிட்டி வட்டார உறுப்பினர் திரு என்.ஜெயகாந்தன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
இதன் போது குறித்த நிறுவனத்தினருக்கு குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் தனது பிரதேச மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
No comments: