News Just In

8/13/2021 06:44:00 AM

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கி புலி உயிரிழப்பு...!!


காணொளி= https://fb.watch/7lykzy-vuc/
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிகவும் அருகிவரும் நிலையில் உள்ள சருகுபுலியொன்று நேற்று காலை விபத்தில் உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் பிள்ளையாரடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய வாகனம் தப்பிச்சென்றுள்ள நிலையில் குறித்த புலி உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சருகு புலியானது சதுப்பு நிலப்பகுதியில் அதிகளவில் வாழ்ந்துவரும் நிலையில் அண்மைக்காலமாக குறித்த இனம் அருகிவரும் நிலையில் இவ்வாறான விபத்துகளில் இறக்கும் நிலையும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் அண்மைக்காலமாக பிள்ளையாரடியினை அண்டியுள்ள பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களில் வாழும் சருகுபுலிகள் விபத்துகள் மூலம் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றது.






No comments: