News Just In

8/13/2021 07:12:00 AM

பேராற்றுவெளி மையவாடியின் அருகில் குப்பை கூழங்கள் மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டுவதை தவிர்க்குமாறு கோரிக்கை...!!


(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராற்றுவெளி மையவாடியின் அருகில் இனந்தெரியாதோரால் குப்பை கூழங்கள் மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டுவதால் அவ்வீதியால் செல்லுவோர் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பேராற்றுவெளி கிராமத்தில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். பேராற்றுவெளி கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் மருங்கிலே முஸ்லிம் மையவாடி அமையப்பெற்றுள்ளது.

இதில் இறந்த மிருகங்களில் கழிவுப்பொருட்கள் மற்றும் குப்பைகள் கூழங்களை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மையவாடியில் அருகில் கழிவுகளை கொட்டுவது தொடர்பாக கந்தளாய் பிரதேச சபைக்கு பேராற்றுவெளி முஸ்லிம் பள்ளிவாயலினால் கடிதம் மூலம் அறிவித்தும் இது வரைக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்தில் பெயர் பலகைகளை இட்டு தடுப்பதற்கான வழிவகைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







No comments: