News Just In

7/18/2021 07:30:00 AM

திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்...!!


திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாற்று கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் ஒன்று நேற்று(17) சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் கிண்ணியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இச்சடலம் மீட்கப்பட்டதுடன் மீனவர்களின் கட்டுவலையில் இச்சடலம் ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வில் வெளியைச் சேர்ந்த முகம்மட் இஸ்மாயில் – றிஸ்வி (வயது 42) என அடையாளம் காணப்பட்டதுடன் தபோது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: