News Just In

7/23/2021 10:21:00 PM

கிராமங்கள் தோறும் ஐந்து வீடுகளை நிர்மானித்து கொடுக்கும் திட்டத்திற்கமைய கிரான்குளம் பகுதியில் அடிக்கல் நடும் நிகழ்வு...!!


ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடணத்திற்கு அமைவாக அரசினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிராமங்கள் தோறும் ஐந்து வீடுகளை நிர்மானித்து கொடுக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறிய நிலையில் வாழ்ந்துவரும் குடும்பம் ஒன்றிற்கான வீட்டிறிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு, அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் வீட்டு உரிமையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.








No comments: