News Just In

7/18/2021 08:55:00 AM

6 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலி!!


நாட்டில் பல்வேறு திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 'லலித் வசந்த' காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீதுவைப்பகுதியில் கட்டளையை மீறி பயணித்த அதிசொகுசு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தில் பயணித்த நபர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து, சுமார் 6 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த 'லலித் வசந்த' என்பவரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

No comments: