News Just In

7/23/2021 05:10:00 PM

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அங்குரார்ப்பன நிகழ்வுகள் ஆரம்பம்...!!


டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அங்குரார்ப்பன நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

207 நாடுகள் பங்குகொள்ளும் இந்த போட்டியில் 11 ஆயிரத்து 300க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குகொள்கின்றனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடத்திற்கு பிற்போடப்பட்டது.

ஜப்பானில் கோலாகலமாக 207 நாடுகள் பங்குகொள்ளும் நிகழ்வு பொதுவாக மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சர்வதேச ஒலிம்பிக்ஸ் குழுவின் தலைவர் தோமஸ் பேச் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஆரம்பமாகும் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

No comments: