News Just In

7/02/2021 09:09:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 135பேருக்கு கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(02) 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 34 பேருக்கும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேருக்கும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேருக்கும்
செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும்
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும்
பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும்
சிறைச்சாலையில் இருவருக்கும்
முப்படை வீரர் ஒருவருக்கும்
வெளி மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்குமாக இன்று மாத்திரம் 135 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: