News Just In

7/21/2021 03:31:00 PM

பிறந்து 05 நாட்களேயான சிசு பணத்துக்காக விற்பனை...!!


பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவை பணத்திற்காக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் - நெல்லியடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நெல்லியடி - மந்திகை வைத்தியசாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிசுவை பெற்றெடுத்த தாய் திருமணமாகாதவர் என்றும், அதனால் தனக்கு பிறந்த குழந்தையை தனது சகோதரியிடம் கையளித்திருப்பதாகவும் காவற்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: