துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபரொருவர் துவிச்சக்கர வண்டியை வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சம்பவமொன்று நேற்றிரவு ((14) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாப் பிச்சை வீதியில் வைத்தே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனையைச் சேர்ந்த நபரொருவரின் EP –BCV 8533 எனும் இலக்கமுடைய கறுப்புநிற பல்சர் மோட்டார் சைக்கிளே திருடப்பட்டுள்ளது.
குறித்த துவிச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: