40 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், இன்றையதினம் காலை புத்தூர் - நிலாவரை வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார்.
அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக்க சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments: