கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை, மாஞ்சோலை ஆகிய பிரதேச கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடமாடும் வாகனங்கள் ஊடாக போசாக்குணவு வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மே, ஜுன் மாதங்களுக்கான போசாக்கு உணவுப் பொருட்களை ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் நேற்று (12) வீடு வீடாகச் சென்று வழங்கி வைத்தது.
No comments: