News Just In

6/14/2021 03:19:00 PM

பல்பொருள் அங்காடிகளில் ஒன்லைன் விநியோக சேவை மூலம் மதுபானங்களை விற்க அனுமதி இல்லை...!!


நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் ஒன்லைன் விநியோக சேவை மூலம் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்படவில்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண தடைக்கு ஏற்ப மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் பல்பொருள் அங்காடிகளில், ஒன்லைன் விநியோக சேவை மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய கலால் திணைக்களம் அனுமதி அளித்ததாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் மதுவை வாங்கலாம் என குறித்த செய்தி தெரிவித்திருந்த நிலையிலேயே கலால் திணைக்களம் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

No comments: