News Just In

6/13/2021 10:23:00 PM

மட்டக்களப்பில் இன்று 67பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(13) 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேருக்கும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்
செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கும்
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேருக்கும்
பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேருக்கும்
ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11பேருக்கும்
கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 03 பேருக்குமாக
இன்று மாத்திரம் 67 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: