News Just In

2/28/2021 03:28:00 PM

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம்..!!


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சந்த் பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும், 2020 ஆம் ஆண்டுக்காண கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பரீடசை ஒத்திகைக்கப்பட்டது.

இந்த நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையினை நாளை நடாத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடு முழுவதும் 4 ஆயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடாத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 40 விசேட பரீட்சை மத்திய நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சையில் தோற்றுவதற்கான விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சந்த் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணத பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பணியாளார்களுக்கான விசேட பஸ் சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், மேலதிக பஸ் சேவைகள் அவசியமாயின் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.

No comments: