News Just In

1/25/2021 08:25:00 PM

மட்டக்களப்பு- திருகோணமலை வீதியில் சீமெந்து லொறியில் மோதி உப்பு வியாபாரி உயிரிழப்பு!!


திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதியில் சந்தியில் சீமெந்து லொறியில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை, பச்சிலை சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரே இவ்வாறு ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.

மூதுரை சேர்ந்த 65 வயதுடைய சித்திக் என்ற நபரை முந்திசெல்ல முயன்ற சீமெந்து லொறியின் பின் சக்கரத்தில் சிக்குண்டு பலியாகியாகியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர் .

சம்பவம் இடம்பெற்ற பச்சிலைசந்திக்கு விரைந்த மூதூர் பொலிஸார் லொறியின் சாரதியை கைதுசெய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: