News Just In

1/01/2021 09:44:00 AM

எச்சரிக்கையுடனான வானிலை அறிவிப்பு வெளியாகியது- பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள்!!


வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் வேறு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

காற்று
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை
கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

No comments: