மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று (11) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் அரச அதிபரின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துத்தினை எவ்வாறு சிறந்த முறையில் முன்கொன்டு செல்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டது அதனோடு திணைக்களங்களில் நிதியினை எவ்வாறு கையாள்வது அதனை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்வூகளும் கானப்பட்டது.
திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் பயணக் கொடுப்பனவுகள் தொரபில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் பயிற்சிகள் கலந்துரையாடல்களின் பொது பொருட்கள் கொள்வனவின் போது மாவட்ட பெறுகைக் குழு தீர்மானங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என பிரதம உள்ளக கணக்காய்வாளரான திருமதி இந்திரா மோகன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்~;சி ஸ்ரீகாந் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் கணக்காளர் எஸ்.வினோத் மற்றும்; பிவுகளின் பகுதி தலைவர்கள் கலந்து கொண்டு தக்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
No comments: