News Just In

9/12/2020 05:07:00 AM

சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சன்மானத்தை அதிகரிக்க நடவடிக்கை!!


சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்களை கைது செய்யும் பொலிஸாருக்கும், இவை குறித்து தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கும் வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிப்பதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ரி 56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்படால் தகவலை வழங்கிய நபருக்கும் கைது செய்த பொலிஸாருக்கும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும்.

ரி 56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு இரண்டு இலட்சம் ரூபாவும், தகவலை வழங்கிய நபருக்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும்.

ரி பீட்டர் ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தகவல் வழங்கியவருக்கும் 50 ஆயிரம் ரூபாவும், துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் இருவருக்கும் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைதுப்பாக்கியுடன் சந்தேக நபரை கைது செய்யும் பொலிஸாருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணமும், தகவல் வழங்குபவருக்கு 15 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படும். துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் இருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபரை வைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் , தகவல் வழங்குபவருக்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பணம் வழங்கப்படும். துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்படும் போது பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒரு இலட்சம் ரூபாவும் , தகவலை வழங்கிய நபருக்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தன்னியக்க துப்பாக்கியுடன் சந்தேகநபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் , தகவல் வழங்குபவருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும். துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோத்தருக்கு ஒரு இலட்சம் ரூபாவும் , தகவல் வழங்குபவருக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வேறு வகையான துப்பாக்கியுடன் சந்தேக நபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் , தகவலை பெற்றுக் கொடுத்த நபருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும். துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் இருவருக்குமே 25 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும்.

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 15 ஆயிரம் ரூபாவும் , தகவல் வழங்குபவருக்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுவதுடன் துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் , தகவல் வழங்குபவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும்.

வெளிநாட்டியில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரை கைது செய்யும் பொலிஸாருக்கும் தகவல் வழங்குபவருக்கும் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். கைக்குண்டு மாத்திரம் கைப்பற்றப்படும் போது இருவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும்.

No comments: