News Just In

6/18/2020 11:23:00 AM

விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியத்தை பெறுவோருக்கான அறிவித்தல்!!


விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தங்களுக்கான அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை நேற்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இந்த ஓய்வூதியத்திற்கான நிதியை எதிர்வரும் 20 ஆம் திகதியாகும்போது, நாட்டிலுள்ள அனைத்து அஞ்சலகங்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஏபா தெரிவித்துள்ளார்.

No comments: