News Just In

6/27/2020 06:07:00 PM

கல்லடியில் பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக போட்டியிடும் அருணாசலம் ரவீந்திரன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று கல்லடி பிரதான வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு இந்து ஆலயங்களின் ஒன்றிய பிரச்சார செயலாளர் க.தியாகராஜா அவர்கள் கலந்து கொண்டு நாடா வெட்டி அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

அருணாசலம் ரவீந்திரன் அவர்கள் தனது உரையில் பொதுஜன பெரமுன- மொட்டு சின்னத்தில் இலக்கம் 1 இல் போட்டியிடுவதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் ஏனையோரை போன்று இளைஞர்கள் ஆதரவு குறைவானாலும் அவர்களை விட அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்.

இவ் விழாவில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






No comments: