News Just In

5/12/2020 10:17:00 AM

மட்டக்களப்பில் அரச அலுவலர்களுக்கு பாதுகாப்பு முகக் கவசங்கள், தொற்று நீக்கிகள் வழங்கிவைப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

இயல்புவாழ்வை மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய மட்டக்களப்பில் சகல அரசாங்க சேவைகளும் முழுமையாக செயற்படத் துவங்கியுள்ளதாகவும் அதனடிப்படையில் மட்டக்களப்பில் அரச அலுவலர்களுக்கு பாதுகாப்பு முகக் கவசங்கள், தொற்று நீக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

அரச பணியாளர்களின் பாதுகாப்பிற்கான ஒரு தொகுதி சுகாதாரப் பொருட்கள் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் மாவட்டச் செயலாளரிடம் திங்கட்கிழமை 11.05.2020 கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும், மட்டக்ளப்பிலுள்ள பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களிடையே கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்குடன் இந்த பாதுகாப்பு பொருட்களை வழங்கியதாக

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிழக்குப் பிராந்திய விற்பனை முகாமையாளர் பொன்னையா புவனேந்திரன் தெரிவித்தார்.

இந்த சுகாதார பொருட்களில் 3450 முகக் கவசங்கள், 275 கை கழுவும் திரவம் அடங்கிய கொள்கலன்கள், 5 லீட்டர் கொள்ளளவு கொண்ட 20 கலன் தொற்று நீக்கித்திரவம் விழிப்புணர்வு பதாதைகள் என்பன அடங்கியிருந்தன.

இச்சுகாதாரப் பொருட்கள் உடனடியாக சகல பிரதேச செயலகங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான பணிப்புரை அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு காரியாலய நிர்வாக உத்தியோகத்தர் பானுமதி கருணாகரன், சிரேஸ்ட விற்பனைக் குழுத்த தலைவர் எஸ். ஸ்ரீகரன், மாவட்ட செயலக கணக்காளர் எம். விநோதன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் உட்பட இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.











No comments: