News Just In

3/05/2020 12:48:00 PM

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு தங்க விருது!


2015 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப்படுத்தப்பட்ட நிதிச் செயலாற்றுகையின் மதிப்பீட்டின் கீழ் அண்மையில் இலங்கையில் உள்ள 844 நிறுவனங்களின் நிதிச் செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டது.

இதன்படி 2018 ஆம் ஆண்டு பாராளுமன்ற கணக்கீடு தொடர்பான நிதிச் செயலாற்றுகையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக பாராளுமன்ற பொதுக்கணக்குகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளில் 110 நிறுவனங்களுக்கு அதி உயர் நிதிச் செயலாற்றுகையை வெளிப்படுத்தியமைக்காக விருதுகளும் , சான்றிதழ்களும் பாராளுமன்றத்தில் வைத்து 28.02.2020 வழங்கப்பட்டது.

இந்நிலையில்இ இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர் உயர் திரு. க.மகேசன் கலந்து கொண்டு 97 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்ற யாழ்.மாவட்ட செயலகத்திற்கான தங்கவிருதினைப் பெற்றுக்கொண்டார் .

No comments: