News Just In

3/05/2020 02:04:00 PM

தேசிய நிதி நிருவாகப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மூன்றாம் இடம்


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மாவட்டச் செயலகங்களுக்கிடையிலான நாடாளுமன்ற கணக்குகள் குழுவினால் நடாத்தப்பட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டமும் கண்டி மாவட்டமும் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலக தகவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2018 நிதியாண்டிற்கான பாராளுமன்ற கணக்குக் குழுவுக்கு உரிய கால நேரத்திற்கு நிருவாகக் கணக்கு அறிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதம கணக்காளரான கே. ஜெகதீசனின் வழிகாட்டலின் கீழ் இயங்கிய கணக்காளர் கிளை சிறப்பாக செயற்பட்டு இத்தகைய அடைவைப் பெற்றிருப்பது மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களையும் அதேபோன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் சார்ந்ததாகும் என மாவட்டச் செயலாளர் கலாமதி பத்தமராஜா தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டிலிருந்து மாவட்டச் செயலகத்தின் நிதி நிருவாக செயல்பாட்டினை முன்னெடுத்து வந்திருந்த முன்னாள் அரசங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான மா. உதயகுமார் அவர்களுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுத்து வெற்றிகொள்வதற்கு அவரது பங்களிப்பும் மிகுந்த காத்திரமான பங்களிப்பாகக் கருத முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கணக்குக் குழுவினால் நடாத்தப்பட்ட இப்போட்டிக்கான விருதுகள் கடந்த 28ம் திகதியன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் கையளிக்கப்பட்டபொழுது மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு இவ்விருதினைப் பெற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற கணக்குக் குழுவினால் நடாத்தப்பட்ட இப்போட்டியில் முதலாம் இடத்தினை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் இரண்டாம் இடத்தினை குருநாகல் மாவட்ட செயலகமும் மூன்றாம் இடத்தினை கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட செயலகங்களும்  பெற்றிருக்கின்றன.



No comments: