இந்நிகழ்வில் கமு / சது / நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அதிபர் திரு. சீ. பாலசிங்கன் , அமைப்பின் ஆலோசகரான திரு. ரா. நிர்மலரூபன் , கணிதபாட ஆசிரியர் திரு. வ. புவனேஸ்வரன் , மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள்; பங்குபற்றினர்.
இத்திட்டத்திற்கான நிதியுதவியினை திரு. கா. பன்னீர்ச்செல்வம் (மாலைதீவு) , திரு. க. பகீரதன் (கனடா) , திரு. ச. குவேந்திரா (குவைத்) , திரு. செ. ஜேசுதாசன் (குவைத்) , திரு. த. விபுலானந்தன் (இத்தாலி) ஆகியோர் வழங்குகின்றனர். இத்திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 16.02.2020 ஆம் திகதியன்று நாவிதன்வெளி – 01 பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றவுள்ள இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடந்த 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்திட்டத்தில் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியதோடு க.பொ.த (சா/த) – 2018 பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: