(சுபா)
செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் அமைக்கப்பட்ட வழிப்பிள்ளையார் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளது.
குறித்த பிள்ளையார் சிலை அடித்து உடைத்து வீசப்பட்டிருந்ததனை இன்று காலை 06 மணியளவில் உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் அவதானித்துள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள்
நேற்றிரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் இன்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர்.
இவ் வழிப்பிள்ளையார் சிலையினை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக யுத்த காலத்தின் முன்பிருந்தே வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்ததை துப்பரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.
இப் பிள்ளையார் சிலையை உடைத்தெரிந்த விசமிகள் யாராக இருந்தாலும் தமிழர் வாழும் இப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தரமாக வேலையை செய்வதை இத்துடன் நிறுத்தவேண்டும் எனவும் உதயசூரியன் உதவிக்குழுவினர் கவலை தெரிவித்தனர்.
குறித்த பிள்ளையார் சிலை அடித்து உடைத்து வீசப்பட்டிருந்ததனை இன்று காலை 06 மணியளவில் உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் அவதானித்துள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள்
நேற்றிரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் இன்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர்.
இவ் வழிப்பிள்ளையார் சிலையினை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக யுத்த காலத்தின் முன்பிருந்தே வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்ததை துப்பரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.
இப் பிள்ளையார் சிலையை உடைத்தெரிந்த விசமிகள் யாராக இருந்தாலும் தமிழர் வாழும் இப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தரமாக வேலையை செய்வதை இத்துடன் நிறுத்தவேண்டும் எனவும் உதயசூரியன் உதவிக்குழுவினர் கவலை தெரிவித்தனர்.






No comments: