News Just In

1/19/2020 12:11:00 PM

சிங்கலே, ராவண பலகாய அமைப்புகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் நீராவியடி ஆலயத்திற்கு விஜயம்


சிங்கலே, ராவண பலய என்ற கடும்போக்கு சிங்கள பௌத்த அமைப்புகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நேற்று முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர்.

பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரோ மற்றும் சிக்கலே அமைப்பை சேர்ந்த மடில்லே பஞ்ஞாலோக தேரோ ஆகியோர் அடங்கிய பிக்குகள் அடங்கிய குழுவினர் நேற்று இரவு 7 மணியளவில் சென்று ஆலயம் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டதோடு பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்படுள்ள பௌத்த விகாரையை சேர்ந்த அமைப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் .

மேலும் பௌத்த விகாரை அமைக்கப்படுள்ள பகுதிக்கு எதிரே உள்ள இராணுவ முகாமுக்குள் நீராவியடி பகுதியில் அமைந்துள்ள குறித்த குருகந்தே ரஜமகா விகாரையின் தொன்மையை சொல்லும் தொல்பொருள் சிதைவுகள் இராணுவத்தினரால் அருங்காட்சியகமாக வைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கும் சென்று பார்வையிட்டனர் .

கொழும்பில் இருக்கும் பௌத்த பிக்குகளைவிட வடக்கு கிழக்கில் வசிக்கும் பிக்குகள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் தமிழ் இனவாதிகளால் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அந்த நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கோடு அவர்களுக்குரிய பாதுகாப்பை ஏற்படுத்தி பௌத்த மதத்தை வளர்க்கும் நோக்கோடு தாம் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாக ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரர் தெரிவித்தார் .

No comments: