News Just In

1/10/2020 07:46:00 PM

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை பல்கலைக்கழகத்தின் உணவக பகுதியினுள் பகிடிவதை சம்பவம் குறித்து ​மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் மாணவரொருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிக்கா விஜேரத்ன தெரிவித்தார்.

No comments: