News Just In

12/26/2019 01:45:00 PM

வீழ்ச்சியடைந்துள்ள சிறு, மத்தியதர தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

வீழ்ச்சியடைந்துள்ள சிறு மற்றும் மத்தியதர தொழில் நடவடிக்கைகளை மீண்டும் மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இது தொடர்பாக பிரதமரின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகரும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருமான அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில் இதற்காக தொழில் முயற்சியில் ஈடுபட்டவர்கள் பெற்ற வங்கி கடனுக்கான வட்டியை மாத்திரம் அறவிடுவதற்கு ஒரு வருட சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதிகூடிய தொகையாக 30 கோடி ரூபா கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments: