(சுபா)
நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகிய நிலையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் விஜயசுதாகர் மிருனுகிருஷாந் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் பழைய பாடத்திட்டத்தில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தினையும், தேசிய ரீதியாக 37ஆவது (Z.Score- 2.1326) இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
செங்கலடி பிரதேசத்தினை சேர்ந்த மிருனுகிருஷாந் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்-B, பொறியியல் தொழில்நுட்பத்தில்-B, தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம்-A சித்தியினையும் பெற்று பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

No comments: