News Just In

12/12/2019 05:34:00 PM

மட்டு மாநகர சபையால் கருவேப்பங்கேணி பிரதேச வெள்ள நீரினை அகற்றும் பணி

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கருவேப்பங்கேணி பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகள் முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் வழிப்படுத்தலின் கீழ் மாநகர சபையானது முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்திற்கு மேலாக பெய்து வரும் அடை மழை காரணமாக மாநகர சபைக்குட்பட்ட கருவேப்பங்கேணி பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகள் இன்று (12.12.2019) மேற்கொள்ளப்பட்டன.
கருவேப்பங்கேணி, ஜெயந்திபுரம் போன்ற பகுதிகளில் வெள்ள நீரானது தேங்கியுள்ளதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அத்துடன் டெங்கு போன்ற நோய் தொற்றுகளுக்கும் உள்ளாகும் நிலையும் உருவாகியுள்ளது.

இதன்காரணமாக மாநகர சபையின் 6ஆம் வட்டார உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவும் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனுக்கு விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க மேற்படி பணியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பணிகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்களான தம்பிராஜா இராஜேந்திரன், துரைசிங்கம் மதன், புஸ்பராஜ் ரூபராஜ், ஐயாத்துரை சிறிதரன், வி.பூபாலாஜா மற்றும் மாநகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் முன்னெடுத்தனர்.



















No comments: