News Just In

12/26/2019 01:07:00 PM

இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து!

இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோரது விடுமுறை இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நத்தார் தின கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு உதயத்திற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து அனைத்து பிரதேசங்களுக்கும் தேவைக்கு மேலதிகமாக 100 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 

இதேவேளை கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் நாளை மற்றும் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

No comments: