News Just In

12/08/2019 06:26:00 PM

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தற்போது பொலிஸ் தலைமையகத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இராணுவ அதிகாரியொருவர் தேசிய புலனாய்வு சேவையின் பிரதானியாக நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

No comments: