News Just In

12/08/2019 08:00:00 PM

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி வாக்குமூலம் வழங்கினார்!

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும், கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு பெண் அதிகாரியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (08) விசேட விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இன்று அவர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். டிசம்பர் 09ஆம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுபவர் சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட பெண் இன்று தூதரக அதிகாரிகளுடன் சென்று சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.



No comments: