News Just In

12/07/2019 07:29:00 PM

திருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி


திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்னர்.

இச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் செல்வராஜா சினியோன் (04வயது) எனவும் தெரியவருகின்றது.

தற்பொழுது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: