வாக்களிப்பின் போது ஒரு வேட்பாளருக்கு முதலாவது விருப்பு வாக்கை அளிக்க முடியும். அத்துடன் மற்றும் இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கை அளிக்க முடியும். தாம் விரும்பினால் ஒருவருக்கு மாத்திரமும் வாக்களிக்கவும் முடியும்.
அத்தோடு முதலில் ஒரு சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட்டு பின்னர் அது தவறெனக் கருதி அதனை கிறுக்கல் மூலம் நிராகரித்து மீண்டுமொரு சின்னத்திற்கருகில் புள்ளடியிட்டால் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியற்றதாகவே கருதப்படும். எனவே மக்கள் வாக்களிக்கும் விடயத்தில் தெளிவுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.



No comments: