News Just In

11/10/2019 08:20:00 PM

செல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்துச் சம்பவம் - ஒருவர் பலி

செல்லக்கதிர்காமம் – தனமல்வில் வீதியில் போகஹசந்தி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: