தும்பங்கேணியில் காட்டுயானை கிராமத்தினுள் உட்புகுந்து பயன்தரும் தென்னை மரங்களை அழித்துவிட்டுச் சென்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலப்பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலை புகுந்த காட்டுயானை அக்கிராமத்திலிருந்த தென்னம் தோட்டம் ஒன்றை முற்றாக அழித்துவிட்டுச் சென்றுள்ளதாக ஊடகவியலாளர் வ.சக்திவேல் தெரிவித்தார்.
அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானை சுமார் 40 வருடங்களாக இருந்து பயன் கொடுத்து வந்த தென்னைகளை முற்றாக அழித்துள்ளதுடன், மாமரங்களையும் உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
வெளியில் ஏதோ சத்தம் கேட்கின்றது என்பதை அவதானித்த குடும்பத்தினர் காட்டுயானை தமது தென்னைகளை உடைத்து அழிப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் கிராம மக்கள் அயலிலுள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பலத்த சத்தமிட்டும், பட்டாசு கொழுத்தியும் யானை அசையவில்லை. பின்னர் அதிகாலை 3 மணியளவில் யானையை ஒருவாறு தீப்பந்தம் ஏந்தி பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் வெளியேற்றியுள்ளார்கள்.
இச்சம்பவம் தமக்கு பாரிய மன உளைச்சலைத் தந்துள்ளதோடு, தாம் சுமார் 40 வருடங்களாக பேணிப் பாதுகாத்துவந்த பயன்தரும் தென்னைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை பாரிய நட்டத்தையும்ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்நிலையில் ஒவ்வாரு இரவுப் பொழுதையும் தாம் காட்டு யானைகளுக்குப் பயந்துஅச்சத்துடன் கழித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தொடர்ந்து இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதல்களும், அட்டகாசங்களும் அதிகரித்து வருகின்றன. அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறுபட்ட பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அது இற்றைவரை மக்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்துள்ளது. மேலும் இதற்குரிய நிரந்தரத் தீர்வின்றி அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாக ஊடகவியலாளர் வ.சக்திவேல் மேலும் தெரிவித்தார்.
11/01/2019 11:32:00 AM
வெல்லாவெளி-தும்பங்கேணியில் காட்டுயானை உட்புகுந்து அட்டகாசம்
Subscribe to:
Post Comments (Atom)











No comments: