ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் முக்கிய பணி இன்று (28) ஆரம்பமானது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை சனிக்கிழமை ஆரம்பமான போதிலும் இதன் முக்கிய பணி இன்று ஆரம்பமானதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால்காரர் வீடுகளுக்குவரும்போது வீட்டில் நாய் முதலான செல்லப்பிராணிலிருந்து தபால்காரர்களை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தபால் மா அதிபர் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments: