5 தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் நிலைப்பாட்டை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிரைட் இன் விருந்தினர் விடுதியில் இன்று (28) ஆரம்பமாகியுள்ளது.
05 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய குழுவினர் கலந்து கொண்டுள்ள இக் கலந்துரையாடலில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அதன் பின்னரான நகர்வுகள், ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு, அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவொன்றை தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒன்றாக முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: