News Just In

9/21/2019 01:49:00 AM

கோட்டபாய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது


கோட்டபாய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டபாய ராஜபக்சவுக்கான கட்டுப்பணத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இன்று செலுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் ஏற்கனவே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இலங்கை சோசலிசக் கட்சியின் சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா, சுயாதீன கட்சியின் சார்பில் ஜயந்த கெட்டகொட, சுயேட்சை வேட்பாளர் சிறிபால அமரசிங்க ஆகியோரே தமது கட்டுப்பணத்தை ஏற்கனவே செலுத்தியுள்ளனர்.

No comments: