News Just In

7/16/2026 10:08:00 AM

செம்மணி மனிதகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக் கூடுகள் வெளிப்பட்டன!

செம்மணி மனிதகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக் கூடுகள் வெளிப்பட்டன!




யாழ்ப்பாணம் - அரியாலை - செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னதாக 32 நாட்கள் பணிகள் இடம்பெற்று கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் 33ஆவது நாளாக பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புதிதாக சிறுவர்களுடைய இரண்டு என்பு கூடுகளும், இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் வெளிப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும், இன்றைய தினத்தில் என்புக்கூடுகள் எதுவும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட 87 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 414 என்பு கூடுகள் வெளிப்பட்டுள்ளதுடன், அதில் 409 என்பு கூடுகள் இதுவரையில் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: