நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதுடன், கைதிகள் உட்பட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
மோதல் காரணமாக ஏற்பட்ட காயங்களுடன் சுமார் 100 பேர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
No comments: