News Just In

6/13/2026 08:40:00 AM

சுரேஷ் சலேவின் கைதுக்குப் பின்னால் உடையும் இரகசியங்கள்: கே.பி. உடனான சந்திப்புகளும் மூடிமறைக்கப்பட்ட புலிகளின் சொத்துக் குவிப்புகளும்!

சுரேஷ் சலேவின் கைதுக்குப் பின்னால் உடையும் இரகசியங்கள்: கே.பி. உடனான சந்திப்புகளும் மூடிமறைக்கப்பட்ட புலிகளின் சொத்துக் குவிப்புகளும்!


இலங்கையின் முன்னாள் இராணுவ உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராகவும் ஆயுதக் கொள்வனவாளராகவும் இருந்த கே.பி. (குமரன் பத்மநாதன்), 2009 இல் மலேசியாவில் வைத்து இலங்கை உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குமரன் பத்மநாதனைச் சுரேஷ் சலே சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட பல அதிர்ச்சி தரும் இரகசியங்கள் மீண்டும் அம்பலத்திற்கு வரத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுரேஷ் சலேவின் தற்போதைய கைதைத் தொடர்ந்து கே.பி. உடனான அவரது சந்திப்புகள், புலிகளின் சர்வதேச சொத்துக்கள் மற்றும் மூடிமறைக்கப்பட்ட அரசியல் உடன்பாடுகள் குறித்த அதிர்ச்சி தரும் விபரங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

No comments: